சிங்கப்பூர் ஆயுதப் படைகளின் கனரக வாகனமும் எஸ்எம்ஆர்டி பேருந்தும் மோதிய விபத்தில் ஆறு பேர் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம் மதியம் மண்டாய் அவென்யூவில் உள்ள தகனச் சாலைக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது என்று கூறப் படுகிறது.
தற்காப்பு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் மடிக் கக்கூடிய பாலத்தை அதன் கனரக வாகனம் சுமந்து சென்றதாகத் தெரிவித்தது. தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப் படைகளும் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் பொது மக்கள் பாதுகாப்பை முன் னிட்டு விபத்தை கடுமையாகக் கருதுவதாகவும் அறிக்கை குறிப் பிட்டது. இந்நிலையில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த எஸ்எம்ஆர்டி நிறுவனம், பேருந்தில் பயணம் செய்த ஆறு பயணிகள் காயம் அடைந்த விவரத்தை வெளியிட்டது.
"காயம் அடைந்த பயணி களுக்கு ஆன அனைத்து உதவி களையும் வழங்கி வருகிறோம். விபத்து குறித்து எஸ்எம்ஆர்டியும் போலிசாரும் விசாரித்து வரு கின்றன," என்று எஸ்எம்ஆர்டியின் பொதுத் தொடர்பு பிரிவின் உதவி தலைவர் பாட்ரிக் நாதன் தெரிவித்தார்.