கூட்டணி கட்டுக்கதைகளை நம்பவேண்டாம் என்கிறார் விஜயகாந்த் சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி எதிர்பார்க்கப்படும் நிலையில் திமுக=தேமுதிக கூட் டணி உருவாகி இருப்பதாகவும் இந்த மாதம் 8ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதயை தேமுதிக தலைவர் விஜயகாந்த் சந்திக்கிறார் என்றும் தகவல்கள் பரபரப்பாக வெளியாகி வரும் நிலையில் இரு கட்சிகளுமே இதை மறுத்துள்ளன. "திமுக, தேமுதிக கூட்டணியா?
தேமுதிகவுககு 59 இடங்களா?
உங்களுக்கு எப்படி தெரியும்?
எங்கிருந்து செய்தி கிடைத்தது?
தெரிந்தால் சொல்லுங்கள் நானும் தெரிந்துகொள்கிறேன்," என்று புதன்கிழமை இரவு செய்தியாளர்களைப் பார்த்து திமுக பொருளாளர் ஸ்டாலின் கேட்டார். "நாங்கள் ஏற்கெனவே சொல்லி இருக்கிறோம்,. திமுக அணிக்கு தேமுதிக வந்தால் நல்லது, வர வேற்போம்," என்றார் அவர். அதேவேளையில் திருக்கோவிலூரில் விழுப்புரம் மாவட்டம், ரிஷி வந்தியம் தொகுதியில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்த வளர்ச்சிப் பணி கல்வெட்டு திறப்பு விழாவில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், "கூட்டணி பற்றி எனக்குத் தெரியாது. கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்,'' என்று தன் கட்சிக்காரர்களிடம் குறிப்பிட் டார். "கூட்டணி பற்றி விஜயகாந்துக்கு என்ன தெரியும்; பேரத்தைக் கூட்டவே இழுத்தடிக்கிறார் என விவாதம் செய்கின்றனர். என் தொண்டர்களுக்கு நான் சொல்வதுதான் வேதவாக்கு.
'திமுகவா, ஐயையோ வேண்டாம்' என்கிறாரா? 'இருங்கள் இன்னும் பேச வேண்டி இருக்கிறது' என்கிறாரா? தமிழக அரசியலில் பல கட்சிகளை திக்குமுக்காடச் செய்வதில் இவரைப் போன்ற ஓர் அரசியல்வாதி இதுவரை இல்லை என்றே தெரிகிறது. கோப்புப்படம்