புதுடெல்லி: ஏமனில் பயங்கர வாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான 16 பேரில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு தாதியர்கள் பலியாகிய நிலையில், ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரும் தாயகம் திரும்புமாறு வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏமன் நாட்டின் ஏடன் நகரில், கோல்கத்தாவைத் தலைமை யிடமாகக் கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் வயதானவர்களை பராமரிக்கும் முதியோர் இல்லத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் வெள்ளிக்கிழமை திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், இந்தியாவைச் சேர்ந்த நான்கு தாதியர் உள்ளிட்ட 16 பேர் பலியாகினர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். துப்பாக்கி ஏந்திய நால்வர் முதியோர் இல்லத்தை அடைந்த னர். தங்கள் தாயைச் சந்தித்துப் பேசுவதற்கு வந்ததாக முதல் பயங்கரவாதி, வாயிலில் நின்றி ருந்த காவல்காரரிடம் கூறினார்.
பிறகு, நிற்காமல் வலுக் கட்டாயமாக உள்ளே புகுந்த அந்த நபர் திடீரென்று காவல் காரரைச் சுட்டார் என்று உள்ளூர் தகவல் சாதனங்கள் தெரிவித்தன. அதற்குப் பிறகு ஒவ்வோர் அறையாகச் சென்ற பயங்கர வாதிகள் சிலருக்கு கை விலங்கி ட்டனர். அவ்வாறு விலங்கிடப்பட்ட ஏமனைச் சேர்ந்த ஊழியர் களையும் வெளிநாட்டு ஊழியர் களையும் தலையில் துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு, சம்பவ இடத்திலிருந்து விரைந்து தப்பி யோடினர். துப்பாக்கிச் சூட்டுக் கான நோக்கம் இன்னமும் தெரிய வில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், ஏமன் போன்ற ஆபத்தான நாடுகளில் வாழும் இந்தியர்கள் அனைவரையும் நாடு திரும்புமாறு சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டு உள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கடந்த வெள்ளிக் கிழமை வெளியிட்ட பதிவில், "பயங்கரவாதிகள் வெள்ளிக் கிழமை ஏமனில் நடத்திய தாக்குதலில் நான்கு தாதியரும் பலியாகி உள்ளனர். அவர்களை தாய் நாடு திரும்பும்படி இந்தியா தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. அரசின் வேண்டுகோளைப் புறக்கணித்துவிட்டு, அந்த நான்கு பேரும் ஏடனிலேயே தங்கி இருந்தனர். அதுபோன்ற ஆபத்து நிறைந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அனைவரும் தயவு செய்து இந்தியாவுக்குத் திரும்பி வருமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்," என்று அந்த பதிவுகளில் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டு உள்ளார்.