காஜல் அகர்வால் நடித்து கடந்த வருடம் 'மாரி', 'பாயும் புலி' ஆகிய படங்கள் வந்தன. தெலுங் கில் 'டெம்பர்' என்ற படம் வெளியானது. தற்போது 'கவலை வேண்டாம்', தமிழ், தெலுங்கில் தயாராகும் 'பிரம்மோற்சவம்' ஆகிய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஒரு இந்திப் படமும் கைவசம் வைத்துள்ளார். "சினிமாவில் ஒவ்வொரு நடிகர், நடிகைக்கும் தனித்திறமைகள் உள் ளன. சிலருக்கு நன்றாக நடனம் ஆடத் தெரியும். சிலர் காதல் காட்சி களில் சிறப்பாக நடிப்பார்கள். இன் னும் சிலருக்கு சோகமாக நடிக்க வரும். ஆனால் எனக்கு எல்லா கதாபாத்திரங்களிலும் நடிக்க வரு கிறது. அது கடவுள் தந்த வரம்.
"சினிமாவில் அறிமுகமான புதிதில் எதுவும் தெரியாமல்தான் இருந்தேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு விட்டேன். எந்த வேடம் கொடுத்தாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. "நன்றாக நடனம் ஆடுகிறேன். காதல் காட்சிகளில் சிறப்பாக நடிக்கிறேன். சினிமாவுக்கு வந்தபோது அழுகை மட் டும் வராமல் இருந்தது.