காரைக்குடி, அழகப்பா பல்கலைக் கழகம் மற்றும் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி= தேவ கோட்டை, உலகத் திருக்குறள் பேரவை=குன்றக்குடி, நியு செஞ்சுரி புக் ஹவுஸ் பி.லிட்.- சென்னை, உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்= புதுக் கோட்டை, மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம்=மலேசியா, ஜாமியா அற நிறுவனம்=சிங்கப்பூர் ஆகியவை இணைந்து திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை ஜனவரி 7 முதல் 9ஆம் தேதி வரை நடத்தின. இந்த மாநாட்டில் பத்து நாடுகளைச் சேர்ந்த பேராளர்கள் கலந்து கொண்டனர்.
அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர், சொ. சுப்பையா தலைமையேற்று உரை நிகழ்த்தினார். மாணவர்கள் ஒரு குறளையாவது வாழ்க்கையில் கடைப்பிடித்து அதன்வழி நடக்க வேண்டும் என்று மாணவர் களுக்கு அறிவுரை கூறினார். மேலும், அழகப்பா பல்கலைக் கழகத்தில் திருக்குறள் படிப்பு மையம் ஒன்றைத் தொடங்க இருப்பதாகவும், அதில் திருக்குறள் தொடர்புடைய ஆய்வுகள், சொற்பொழிவுகள், கலந்துரை யாடல்கள் நிகழ இருப்பதாகவும்; உலக அளவில் திருக்குறளில் சிறந்து விளங்கும் அறிஞர் களுக்கு விருது வழங்கிச் சிறப் பிக்கவிருப்பதாகவும் குறிப்பிட் டார். மேலும், அழகப்பா பல்கலைக் கழகத்தில் உலகத் தமிழர்களுக்கு உதவும் வண்ணம் தமிழ்க் கலாச்சாரப் பண்பாட்டு மையம் ஒன்றை விரைவில் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.