சிங்கப்பூரின் 51வது தேசிய நாள் அணிவகுப்பு புதிய பல அங்கங்களுடன் புத்தாக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஆளில்லாத, ஒளியூட்டப்பட்ட விமானங்களின் காட்சி, முப்பரிணாம காட்சிகளுடன் கூரையில் இருந்து தரையிறங்கும் பெரிய காட்சியமைப்புகளும் கலைஞர்களும் வியக்க வைப்பர். பத்தாண்டுகளுக்குப் பிறகு தேசிய விளையாட்டு அரங்கில் இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பு இடம் பெறுகிறது. எனவே, உள்ளரங்க வாண வேடிக்கையும் சிறப்பு அங்கமாக நடைபெறும்.
இந்த ஆண்டு தேசிய தின அணிவகுப்பின் கருப்பொருள், 'நம் நாளைய சிங்கப்பூரை உருவாக்குவோம்' என்று தெரிவித்தார் அணிவகுப்பு செயற்குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கெனத் லியோ, 46.