'நான் கடவுள்' ராஜேந்திரன், லொள்ளு சபா சாமிநாதன், கிருஷ்ணமூர்த்தி, அர்ச்சனா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'யானை மேல் குதிரை சவாரி.' கருப்பையா முருகன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாக்யராஜ் பாடல் குறுந்தகட்டை வெளியிட இயக்கு நர் பேரரசு பெற்றுக்கொண்டார். விழாவில் இயக்குநர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி கலந்துகொண்டு பேசியபோது, நகர்ப்புறங்களில் உள்ள திரைய ரங்குகள் ஐந்து நட்சத்திர தரத் துக்கு மாறிவிட்டதாகக் கூறினார். "வணிக வளாகங்களில் திரையரங்குகள் கணிசமாக உரு வாகி வருகின்றன. இந்த திரை யரங்குகளில் படம் பார்க்கச் சென்றால், டிக்கெட் கட்டணம், தின்பண்டங்கள் என்று ஒருவ ருக்கு ஆயிரம் ரூபாய் வரை தேவைப்படுகிறது. நடுத்தர, ஏழை மக்களால் இவ்வளவு செலவு செய்து படம் பார்க்க முடியாது.
'யானை மேல் குதிரை சவாரி' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சி.