வேலையிடங்களில் நேர்ந்த விபத்துக்களால் காயமடைந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டு குறைந்திருந்தாலும் வேலையிட மரணங்கள் உயர்ந்துள்ளன. 2014ஆம் ஆண்டு வேலையிட மரணங்கள் 60ஆக இருந்தன. ஆனால் சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை 66ஆக உயந்ததாக வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகத்தின் ஆண்டறிக்கை தெரி விக்கிறது. சென்ற ஆண்டு வேலையிடத்தில் காயமுற்றோர் எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டைவிடக் குறைந்துள்ளது. சென்ற ஆண்டு 12,285 பேர் வேலையிடத்தில் காயமுற்றதாகவும் அதற்கு முந்தைய ஆண்டில் அந்த எண்ணிக்கை 13,535ஆக இருந்ததாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.
சென்ற ஆண்டு கட்டுமானத் துறையில் ஆக அதிகமாக 27 மரணங்களும் போக்குவரத்துத் துறையில் 15, உற்பத்தித் துறையில் 6 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. மொத்தம் 23 ஊழியர்கள் கீழே விழுந்து மாண்டுபோயினர். போக்குவரத்து விபத்துகளால் 10 பேரும் நகரும் அல்லது விழும் பொருட்களால் 10 பேரும் மரணமுற்றனர். கடந்த ஆண்டின் பிற்பாதியில் வேலையிட மரணங் கள் அதிகரித்ததுடன் இவ்வாண்டு ஜனவரியில் 9 வேலையிட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. "வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்துக்கு சற்றுக் கூடுதலான கவனிப்பு அளித்திருந்தால் இந்த மரணங்களை எளிதாகத் தவிர்த்திருக்க முடியும் என நேற்று நடை பெற்ற வேலையிடப் பாதுகாப்புக் கருத்தரங்கில் மனிதவள துணை அமைச்சர் சேம் டான் கூறினார்.
வேலையிட மேற்பார்வையாளர் களுக்குப் பாதுகாப்புத் தகவல் களை நினைவுபடுத்தக்கூடிய துண்டுப் பிரசுரங்களை வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரக் கழகம் வழங்கியுள்ளது. வேலையிடங் களில் 'நடமாடும் பாதுகாப்பு மையங்கள்', நிறுவனங்கள் போக்குவரத்துப் பாதுகாப்பை நடை முறைப்படுத்த உதவும் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தப் புதிய நடவடிக்கைகள் இவ்வாண்டின் பிற்பகுதியில் அறிமுகம் காணவுள்ளதாக திரு டான் கூறினார்.