மலேசியாவின் பிரச்சினைக் குரிய 1எம்டிபி தொடர்பிலான வங்கிக் கணக்குகளைக் கையாண்டதாகக் கூறப்படும் தனியார் வங்கி அதிகாரி வேலையிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து தனியார் வங்கியான பிஎஸ்ஐ சிங்கப்பூரில் யாக் யேவ் சீ என்ற அந்த அதிகாரி மூத்த உதவித் தலைவ-ராக பணியாற்றி வந்தார். தற்போது 1எம்டிபி தொடர்பில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய குற்றவியல் விசாரணையை அவர் எதிர்நோக்கு கிறார். "தற்போது வங்கியில் அவர் இல்லை," என்று பிஎஸ்ஐ வங்கியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றிய விசாரணையில் பல ஆவணங்கள் வெளியிடப்பட்டன. அப்போது இந்த விசாரணையில் முக்கிய நபராக யாக்கின் பெயர் அடிபட்டது. 1எம்டிபி தொடர்பிலான வங்கிக் கணக்குகளில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றப்பட்ட நடவடிக்கைகளை சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு பிஎஸ்ஐ விசாரணை மேற்கொண்டதால் திரு யாக் சம்பளம் இல்லா ஐந்து மாதம் விடுப்பில் சென்றார். சென்ற அக்டோபர் மாதம் மீண்டும் பணிக்குத் திரும்பிய அவர் கடைசி மாதச் சம்பளமாக ஜனவரி 27ஆம் தேதி 83,000 வெள்ளியைப் பெற்றதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக் கின்றன. விசாரிக்கப்பட்டுவரும் சில வங்கிக் கணக்குகள் யாக்குக்கு சொந்தமானவை. இந்த வங்கிக் கணக்கில் உள்ள சுமார் 9.7 மில்லியன் வெள்ளி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.