அண்மையில் ஏற்பட்ட தொடர் மின்தூக்கி விபத்துகளை அடுத்து இங்குள்ள மின்தூக்கிகள் பாதுகாப்பானதாக இயங்குகின்றனவா என்பதைச் சோதிப்பது, அதற்கான ஒழுங்கு விதிமுறைகளை மறுபரி சீலனை செய்வது போன்ற செயல்களில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். மின்தூக்கிகள் பாதுகாப்பாக இயங்குவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று அமைச்சர் லாரன்ஸ் வோங், கட்டட, கட்டுமான ஆணையத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் அவர் இதனை பதிவேற்றம் செய்துள்ளார். அண்மைக் காலமாக மின்தூக்கி விபத்துகள் தொடர் நிகழ்வாகிக் கொண்டிருக்கின்றன. மின்தூக்கியின் சொந்தக்காரர்கள், திறனாளர்களின் உதவியால் இந்த விபத்து நிகழ்ந்த மின்தூக்கிகள் பற்றி சோதனை மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் புலன் விசாரணைகள் இன்னும் நிறைவு பெறவில்லை.
இந்நிலையில், கட்டட, கட்டுமான ஆணையத்திடம் பயணிகள் மின்தூக்கிகளில் குறிப்பாக வீவக கட்டடங்களில் ஆணையத்தின் தனிப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண் டுள்ளதாக அமைச்சர் வோங் தெரிவித்தார். "மின்தூக்கிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும் நேரங்களில் குடியிருப்பாளர்களுக்கு சற்று வசதியின்மை ஏற்படலாம். "இருப்பினும் பாதுகாப்பே முக்கியம் என்பதை உணர்ந்து பொறுமை காக்க வேண்டும்," என்று அமைச்சர் வோங் கேட்டுக் கொண்டார். நாம், நமது சோதனைகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும். பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளக் கூடாது," என அமைச்சர் வோங் தெரிவித்தார்.