கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீருடன் பிரதமர் நஜிப் ரசாக் அரசியல் கருத்துவேறுபாடு கொண் டிருக்கலாம். அதற்காக திரு மகாதீரை பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து விலக்கியது சரியல்ல என கெஅடிலான் கட்சி உதவித் தலைவர் என். சுரேந்திரன் கூறியுள்ளார்.
திரு மகாதீரின் நியமனம் முடிவுக்கு வருவதாக அறிவித்த பிரதமர் அலுவலகம் அவர் நடப்பு அரசாங்கத்தை ஆதரிக்காதது தான் காரணம் என்று கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான என். சுரேந்திரன் கூறினார்.
‚மகாதீர் நடப்பு அரசாங்கத்தை ஆதரித்தாலும் ஆதரிக்கா விட்டாலும் பெட்ரோனாஸ் நிறுவனத் தின் குறிக்கோள்களோ, நிர்வாகமோ அதனால் பாதிக் கப்படப்போவதில்லை என்றும் பிரதமருடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார் என்பதற்காக பெட்ரோனாஸ் நிறுவனத்தின் ஆலோசகர் பதவியிலிருந்து திரு மகாதீரை விலக்கியது சரியான காரணம் அல்ல என்றும் அவர் கூறினார்.