கண் பார்வையற்றவர்களும் பயன் படுத்தும் வகையில் தீவு முழுவதும் 80க்கும் மேற்பட்ட டிபிஎஸ், பிஓஎஸ்பி ஏடிஎம் இயந்திரங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனை நேற்று வெளியிட்ட அறிக்கையில் பிஓஎஸ்பி தெரி வித்தது. சிங்கப்பூர் பார்வையற்றோர் சங் கத்தின் உதவியுடன் பார்வை யற்றவர்களுக்கு உகந்த வகையில் வங்கியின் 86 ஏடிஎம் இயந்திரங்களில் வசதிகள் சேர்க்கப்பட்டு உள்ளன என்று அறிக்கை குறிப் பிட்டது.
பிரைல் எழுத்துகள், வழி காட்டும் குரல் போன்றவை புதிய வசதிகளில் அடங்கும். கண் பார்வையற்ற வாடிக்கை யாளர்களும் ஏடிஎம் இயந்திரங் களில் அடிப்படை பரிவர்த்த னைகளை பூர்த்தி செய்து கொள் ளும் நோக்கில் இந்த நடவடிக்கை இடம்பெறுவதாக வங்கி தெரிவித்தது.