தொழிலாளர் இயக்கத்தின் இரண் டாவது தாதிமை இல்லம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 350 பேருக்கு பராமரிப்பு வழங்கக் கூடிய சாய் சீயில் உள்ள 'என்டியுசி ஹெல்த்'தின் இந்தப் புதிய வசதி, மூத்தோரை கூடிய விரைவில் வீடுகளுக்கு அனுப்புவதை இலக் காகக் கொண்டுள்ளது. அங் கிருந்தவாறே அவர்களுக்கான மறுவாழ்வு பராமரிப்பைப் பெறலாம். "அதிக எண்ணிக்கையிலான தாதிமை இல்லங்களை உருவாக்கு வது நீண்டகாலத் தீர்வாக இருக்காது. ஒவ்வொரு தாதிமை இல்லமும் ஐந்து முதல் 10 விழுக்காட்டினரை வீடுகளுக்கு அனுப்பும் திறனைக் கொண்டுள் ளது.
அதனைச் செய்ய முடிந்தால் தேவை அதிகம் இருப்பவர்களுக்கு இடமளிக்க முடியும்," என்றும் அவர் குறிப்பிட்டார். இதனைச் செய்வதற்காக சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம், சாங்கி பொது மருத்துவமனை ஆகியவற்றுடன் இரண்டு புரிந் துணர்வுக் குறிப்புகளில் 'என்டியுசி ஹெல்த்' கையொப்பமிட்டுள்ளது. சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழ கத்துடன் இணைந்து தாதிமைத் துறையில் நிபுணர்களை உரு வாக்கி தங்களது தாதிமை இல்லங்களில் அனுபவரீதியான பயிற்சியை 'என்டியுசி ஹெல்த்' வழங்கும். முதியோர் மருத்துவப் பராமரிப் பியல், 'டிமென்ஷியா' எனப்படும் மறதிநோய் உள்ளிட்ட பல நோய் களுக்கான பராமரிப்பில் 'என் டியுசி ஹெல்த்'தின் ஊழியர்கள் சாங்கி பொது மருத்துவமனையில் பயிற்சி பெறுவர்.
சாய் சீயில் நேற்று திறந்துவைக்கப்பட்ட 'என்டியுசி ஹெல்த்' தாதிமை இல்லத்தில் மூத்தோர் ஒருவருக்கு மறுவாழ்வுப் பயிற்சி அளிப்பதைப் பார்வையிடும் நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் (நீல நிறச் சட்டையுடன் வலமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்