பாலர் பருவ பட்டயக் கல்விக்கு அதிக இடங்களை ஒதுக்கப் போவதாக நீ ஆன், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரிகள் அறிவித்துள்ளன. இவ்வாண்டு ஏப்ரலில் தொடங் கும் கல்வியாண்டில் ஆரம்பகால பாலர் பருவ முழுநேர பட்டயக் கல்விக்கு 380லிருந்து 675க்கு இடங்கள் அதிகரிக்கப்படும் என்று நேற்று இரண்டு தொழிற்கல்லூரி களும் தெரிவித்தன.
நீ ஆன் பலதுறைத் தொழிற் கல்லூரி, ஆரம்பகால பாலர்பருவ பட்டயக் கல்விக்கு 220 இடங் களையும் பாலர்பருவ மனோவியல், ஆரம்பகால கல்விக்கு 260 இடங் களையும் சீன பட்டயக் கல்வியின் ஆரம்பகால பாலர்பருவ பயிற்சிக்கு 20 இடங்களும் வழங்குகிறது. தெமாசெக், ஆரம்பகால பாலர் பருவ பட்டயக் கல்விக்கு 175 இடங்களை ஒதுக்கியிருக்கிறது.
நேற்று வெளியிட்ட கூட்டு அறிக்கையில், "ஆரம்பகால பாலர் பருவ கல்வித் துறை வேகமாக வளர்ச்சியடைவதால் சிங்கப்பூரில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் தேவையை இந்த நடவடிக்கை பூர்த்தி செய்யும்," என்று இரு பலதுறைத் தொழிற்கல்லூரிகளும் தெரிவித்தன.
நீ ஆன் பலதுறை தொழில்நுட்பக் கல்லூரியின் ஆரம்பகால பாலர் பருவ கல்வி பயிலும் மாணவி ஏடென் இயோங்(19). ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்