ரூ.4.75 கோடி பறிமுதல்; :பறக்கும் படையினர் அதிரடி

சென்னை: பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் நடத்திய வாகனச் சோதனையின்போது 4.75 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங் கள் இல்லாததால் இத்தொகை பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் மே 16ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள் ளன. வாக்காளர்களுக்குப் பணம் விநியோகிக்கப்படலாம் என்பதால் உரிய கணக்குகள், ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப் பணம், நகைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.

பறக்கும் படையினர் ஆளுங் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படு வதாகச் சில கட்சிகள் புகார் எழுப்பியுள்ள போதிலும், பறக்கும் படையினரின் அதிரடி நடவடிக் கைகள் தொடர்கின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.4.75 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருவரங்கத்தில் வெள்ளிக் கிழமை மதியம் தாசில்தார் பவானி தலைமையில் வாகன சோதனை நடைபெற்றது. அப் போது வங்கி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் தனியார் நிறுவனத்தின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அந்த வாகனத்தில் ரூ.3 கோடியே 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. எனினும் அப்பணத்துக் குரிய ஆவணங்கள் ஏதுமில்லை.

இதுகுறித்து அந்நிறுவன அதிகாரி சரவணன் விளக்கமளித்தார். எனினும் அதில் திருப்தியடையாத பறக்கும் படையினர் பணத்தைப் பறிமுதல் செய்தனர். நெல்லை மாவட்டம் அபிஷேகப் பட்டியிலும் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட் டனர். அப்போது அவ்வழியே சென்ற வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது கட்டுக்கட் டாகப் பணம் சிக்கியது. மொத்தம் மூன்று பெரிய பைகளில் ரூ.79 லட்சம் ரொக்கமாக இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாத தால் அத்தொகை பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, தமிழகத்தில் அமரர் ஊர்தி மூலம் பணம் எடுத்துச் செல்வதைத் தடுக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பறக் கும் படையினரை ஏமாற்றும் வகையில் அமரர் ஊர்திகள் மூலம் பணம் எடுத்துச் செல்லப் படுவது தெரியவந்தது.

கடந்த காலங்களில் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற புகார்கள் கிளம்பின. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கடந்த மக்களவைத் தேர்தலின் போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இப்போது அமரர் ஊர்திகள் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே, சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை மிரட்டி வாக்களிக்கவிடாமல் சிலர் தடுப்பதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், ஒடுக்கப்பட்டவர்களின் வசதிக்காக அவர்கள் இருக்கும் பகுதியிலேயே வாக்குச் சாவடி களை அமைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிகாரி களுக்கு உத்தரவிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!