எஸ்எம்ஆர்டி ரயில் கட்டமைப்பில் மேலும் இரண்டு இடங்களில் நீரேற்று இயந்திரங்கள் பழுதடைந் திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அண்மையில் பீஷானில் உள்ள நீரேற்று இயந்திரங்கள் பழுதடைந்திருந்ததால் சுரங்க ரயில் பாதையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்நிலையில், எஸ்எம்ஆர்டி நிறுவனம் மேற்கொண்ட சோதனைகள் மூலம் மேலும் இரண்டு இடங்களில் நீரேற்று இயந்திரங்கள் பழுதடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. கெம்பாங்கானில் உள்ள சுரங் கப்பாதையில் இருக்கும் எட்டு நீரேற்று இயந்திரங்களில் இரண்டு நீரேற்று இயந்திரங்கள் ஒழுங்காக இயங்கவில்லை என்றும் லெவண்டரில் உள்ள நான்கு நீரேற்று இயந்திரங்களில் மூன்று நீரேற்று இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன என்றும் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் நேற்று நாடாளு மன்றத்தில் தெரிவித்தார்.
ரெட்ஹில், சாங்கி ஆகிய இடங்களிலும் சோதனைப் பணி கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த இடங்களில் உள்ள நீரேற்று இயந்திரங்கள் நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. மழைக்காலத்தில் சேரும் தண்ணீரை கால்வாய்களுக்குள் வெளியேற்ற இந்த நீரேற்று இயந்திரங்கள் உதவுகின்றன. பீஷானில் உள்ள நீரேற்று இயந்திரங்களை ஒழுங்காகப் பராமரிக்க எஸ்எம்ஆர்டி ஊழியர் கள் தவறியதால் கடந்த மாதம் 7ஆம் தேதியன்று அங்குள்ள சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்பட்டது.
நீரேற்று இயந்திரங்கள் ஒழுங்காகப் பராமரிக்கப்படாததால் பீஷான் எம்ஆர்டி நிலையத்துக்கும் பிராடல் நிலையத்துக்கும் இடையில் உள்ள சுரங்கப்பாதையில் வெள்ளம் ஏற்பட்டது. படம்: ஸ்ட்ரெட்ஸ் டைம்ஸ் வாசகர்