கட்டடங்களில் பசுமைவெளி: 2030க்குள் இரட்டிப்பாகலாம்

சிங்கப்பூரின் அடுக்குமாடிக் கட்ட டங்களில் பசுமைப் பரப்பை வரும் 2030க்குள் இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்போது, தீவு முழுவதும் கட்டடங்களில் நூறு காற்பந்துத் திடல்களுக்கும் கூடுதலான பரப் பளவில், அதாவது 100 ஹெக்டர் பரப்பளவில் பசுமைவெளி அமைக்கப்பட்டுள்ளது. அதை 200 ஹெக்டராக அதி கரிக்க 'லஷ்' (LUSH) எனப்படும் நகர்ப்புற வெளிகள், உயர்ந்த கட்டடங்களுக்கான நில வடிவ மைப்புத் திட்டத்தை நகர மறுசீரமைப்பு ஆணையம் மேம் படுத்தவுள்ளது. கட்டுமானத் திட்டங்களில் பசு மையை ஒருங்கிணைக்க கட்டு மான நிறுவனங்களையும் கட்டட உரிமையாளர்களையும் ஊக்குவிக் கும் நோக்கில் 2009ல் இந்த 'லஷ்' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. சிங்கப்பூர் எக்ஸ்போவில் நேற்று நடந்த 'கிரீன் அர்பன் ஸ்கேப் ஏ‌ஷியா' தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் டெஸ்மண்ட் லீ, "பசுமையை உயர்வாக மதிப்பதும் அதை நேசிப்பதும் இப்போது சிங்கப்பூர் தேசிய அடை யாளத்தின் மைய அங்கமாகத் திகழ்கிறது," என்றார்.

11 மாடிகளைக் கொண்ட 'கம்போங் அட்மிரல்டி காம்ப்ளக்ஸ்' கட்டடத்தின் உச்சியில் சமூகப் பூங்கா, காய்கறிகள் தோட்டம், மழைநீர் சேகரிப்புப் பகுதி ஆகியவை அமைந்துள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!