சென்னை: காலாவதியான பேருந்துகளை இயக்கும் மாநிலங் கள் தொடர்பான பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களில் இருந்தும் பெறப்பட்ட தகவல்க ளின் அடிப்படையில் வெளியிடப் பட்டுள்ள இந்தப் பட்டியலின்படி, காலம் கடந்து பேருந்துகளை இயக்குவதில் பீகார் முதலிடத் திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. பீகாரில் அரசுப் பேருந்துகள் காலாவதியாகி 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், அவை தொடர்ந்து இயக்கப்படுகின்றன.
இதற்கு, அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மும், மூன்றாவது இடத்தில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகமும் இடம்பெற்றுள்ளன. நான்காவது இடத்தை சண் டிகர் போக்குவரத்து கழகமும், அடுத்து சேலம் போக்குவரத்து கழகமும் பட்டியலில் உள்ளன. ஒரு பேருந்தை 5 லட்சம் கிலோ மீட்டர் வரை ஓட்டலாம் அல்லது 8 ஆண்டுகள் பயன்படுத் தலாம். அதன்பிறகு அது காலா வதியான பேருந்தாக மாறி விடுகிறது.