'அறம்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் எகிறிக் கிடக்கிறது. கோபி நயினார் இயக்கியுள்ள படம் இது.இவர் வேறு யாருமல்ல, 'கத்தி' கதை யார் என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சைக்கு வித்திட்டவர். அதன் பிறகு இவர் கூறிய மற்றொரு கதையைக் கேட்ட நயன்தாராவுக்கு அது பிடித்துப் போகவே 'அறம்' வளர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தை உருவாக்கிய விதம் தம்மை வெகுவாகக் கவர்ந்திருப்பதாகச் சொல்லியுள்ளார் நயன். இதைச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார் கோபி நயினார். கடந்த காலத்தில் தனக்கு நேர்ந்த மோசமான அனுபவங்க ளையும் அவர் சுட்டிக்காட்டினார். "இந்தப் படத்துக்கு முன்பு, எனக்கு நிகழ்ந்த துயரத்தின் போது எனக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தது சினிமா செய்தியாளர்கள்தான். அதன் மூலம்தான் இந்த மிகப்பெரிய வாய்ப்பே எனக்கு கிடைத்தது. அதுதான் உண்மை.
'அறம்' படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில் நயன்தாரா.