ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய பேருந்து லாஸ் வேகஸில் லாரி மீது மோதியது

வா‌ஷிங்டன்: அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கிய ஒரு பேருந்து ஒரு லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் பயணி கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினர். ஓட்டுநர் இல்லாமலேயே இயங் கும் கார் உள்ளிட்ட வாகனங் களை ஏற்கெனவே பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளன. இவற்றின் சோதனை வெற்றி பெற்றுள்ளது. அமெரிக்காவில் தானியங்கி வாகனங்களைச் சாலைகளில் இயக்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி அளித் துள்ளது. இதன்படி லாஸ் வேகஸ் நகரில் தானியங்கி வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடத்தப்பட்டது. அந்த பேருந்தில் 12 பயணிகள் இருந் தனர். ஒரு மணி நேரம் சரியாக ஓடிய அந்தப் பேருந்து அந்த வழியாக வந்த லாரி மீது மோதியது. லாரி ஓட்டுநரின் தவறால்தான் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!