விமானப் பயணியை புரட்டி எடுத்த ஊழியர்கள் நீக்கம்

டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானப் பயணி நடத்தப்பட்ட விதம் குறித்து விசாரிக்க விமானப் போக்கு வரத்து அமைச்சு உத்தரவிட் டுள்ளது. மேலும் இதன் தொடர்பில் விளக்கமளிக்கு மாறு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை விமானப் போக் குவரத்து அமைச்சர் கஜபதி ராஜு கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையிலிருந்து புது டெல்லி வந்த இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த ராஜிவ் கட்யால், 53, என்ப வரை மூன்று ஊழியர்கள் கடு மையாக நடத்திய சம்பவம் காணொளியாக நேற்று முன் தினம் பரவியது. அக்டோபர் 15ஆம் தேதி நடந்த அச்சம்பவத்தைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். விமானப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்தில் ஏறச் சென்ற கட்யாலை விமான ஊழியர்கள் பலவந்தமாகக் கீழே தள்ளி கழுத்தைப் பிடிப் பதும் அவர்களைப் பார்த்து கட்யால் சத்தம் போடுவதும் காணொளியில் பதிவாகியிருந் தது. ஆனால் எதற்காக அவர் கள் அவ்வாறு நடந்துகொண் டார்கள் என்ற விவரம் வெளி யாகவில்லை.

இண்டிகோ விமான ஊழியர்களிடம் சிக்கிய விமானப் பயணி. படம்: சமூக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!