சிங்கப்பூரின் தோற்றுவிப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு நினைவுச் சின்னங்களை நிறுவுவதற்கு ஃபோர்ட் கேனிங் பூங்கா, கார்டன்ஸ் பை த பே ஆகிய இரண்டு இடங்களை 'தோற்றுவிப்பாளர்களைக் கொண்டாடும் குழு' அடையாளம் கண்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களாக நடந்த பலதரப்பட்ட கலந்தாய்வுக் குப் பின் இதனை அக்குழுவின் தலைவர் திரு லீ சு யாங் அறிவித்தார். இந்த இடங்களில் நினைவுச் சின்ன கட்டடங்கள் எழுப்புவது நாட்டின் மையப்பகுதியில் இருப்பதோடு வருங்காலச் சந்ததியினரைக் கவரும் விதமாகவும் இருக்கும்.
நினைவுச் சின்னம் அமைப்பதன் நோக்கம் நமது தேசிய பற்றுதியில் உள்ள பண்புகளையும் இலட்சியங்களையும் குறிப்பதாகவும் இருக்கலாம் என்றார் திரு லீ சு யாங். இதன் தொடர்பில் நடைபெற்றிருக்கும் பல்வேறு கலந்துரையாடல்களின் மூலம் நாம் தற்கால, வருங்காலத் தலைமுறை சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பல தரப்பட்ட எண்ணங்களைப் பெறலாம். "இந்த நினைவுச் சின்னங்கள் பொதுமக்கள் செல்லக்கூடியதாக வும் தனிப்பட்ட முறையிலும் குழுவாகவும் பலர் அங்கு கூடும் வகையிலும் அமையக்கூடியதாக இருக்க வேண்டும்," என்றார். இதன் தொடர்பில் தற்போதுள்ள அருங்காட்சியகங்கள், முக் கிய நினைவுச்சின்னங்கள் ஆகியவற்றை படிப்பினையாகக் கொண்டு சிங்கப்பூரர்களின் வாழ்க்கை அனுபவத்தைப் புத்துயிரூட்டும் வண்ணம் அமைக்க வேண்டும்," என்றார் திரு லீ.
ஃபோர்ட் கேனிங் பூங்கா (மேல் படம்:), 'கார்டன்ஸ் பை த பே'யில் உள்ள பே ஈஸ்ட் கார்டன் ஆகிய இரு இடங்களே சிங்கப்பூர் தோற்று விப்பாளர்களைக் கௌரவிக்கும் விதமாக நினைவுச் சின்னம் எழுப்ப ஏற்ற இடம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்