மாஸ்கோ: சிரியாவில் இருந்து ரஷ்ய படைகளைத் திரும்ப பெற வேண்டும் என்று அதிபர் புட்டின் அந்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். ஐந்தாண்டு உள்நாட்டுப் போருக்குத் தீர்வு கொண்டு வர ஜெனிவாவில் இரண்டாம் நாளாக பேச்சுவார்த்தை நடந்து வரும் வேளையில் சிரியா அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தி பேச்சுவார்த்தைக்கு வழிவிடும் என்று இந்த முடிவை மேற்கத்திய நாடுகள் வரவேற்றுள்ளன. இந்நிலையில், சிரியாவில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்த விரிவான அறிக்கை ஒன்றை ஐநா பின்னர் வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆசாத்துக்கும் புட்டினுக்கும் கருத்துவேறுபாடு என்று உலவிய ஊகங்களை புட்டின் அலுவலகம் மறுத்தது. ரஷ்யாவின் முடிவுக்கு சிரியா இசைந்ததை அடுத்து துருப்புகளை மீட்கும் முடிவு எடுக்கப்பட்டது என்று ரஷ்யா தெரித்தது. எத்தனை விமானங் கள், துருப்புகள் முதலில் மீட்கப் படும் என்றோ ராணுவத்தை முழுமையாக மீட்க எத்தனை காலம் எடுக்கும் என்றோ ரஷ்யா தெரிவிக்கவில்லை. சிரியாவின் தற்போதைய அதிபர் பசார் அல் ஆசாத்துக்கு எதிராக கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உள்நாட்டுப் போரில் சன்னி, ஷியா முஸ்லிம்களுக்கு இடையே நீண்ட காலமாகப் பகை நீடித்து வருகிறது. ஆசாத் ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ் பயங்கரவாதிகள், அல்=கொய்தா ஆதரவுத் பயங்கரவாதக் குழுக்கள் போரிட்டு வந்தன.
ரஷ்ய அதிபர் விளாடிமர் புட்டின் (நடு) நேற்று முன்தினம் கிரெம்ளினில் ரஷ்ய தற்காப்பு அமைச்சர் செர்கி ஷோய்கு (வலது), வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோ (இடது) ஆகியோரைச் சந்தித்து சிரியாவிலிருந்து துருப்புகளை மீட்பது குறித்து உரையாடினார். படம்: ஏஎஃப்பி