ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட செய்தியாளர்கள்

சிட்னி: மலே­சி­யா­வில் கைது செய்­யப்­பட்ட ஆஸ்­திரே­லிய செய்­தி­யா­ளர்­கள் மீது குற்றம் சாட்­டப் ப­டா­மல் அவர்­கள் நேற்று ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்­குத் திருப்பி அனுப்­பப் பட்­ட­னர். அவர்கள் கூச்சிங்கிலிருந்து சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியா திரும்பினர் என்று கூறப்பட்டது அவ்விரு ஆஸ்­தி­ரே­லிய செய்­தி­யா­ளர்­களும் கைதானது குறித்து கவலை கொள்வதாகவும் மலேசிய அதி­கா­ரி­களு­டன் பேச்சு நடத்­த இருப்­ப­தாக ஆஸ்திரேலிய வெளி­யு­றவு அமைச்­சர் ஜூலி பிஷப் கூறி­யிருந்தார்.

ஆஸ்­தி­ரே­லிய ஒலி­ப­ரப்­புக் கழ­கத்­தின் (ஏபிசி) செய்­தி­யா­ளர்களான லிண்டன் பெசர், லூய் எரோக்லு ஆகிய இரு­வ­ரும் கூச்­சிங்­கில் சனிக்­கிழமை மலே­சி­யப் போலி­சா­ரால் கைது செய்­யப் ­பட்­ட­னர். மலே­சி­யப் பிர­த­மர் நஜிப் ரசாக், ஒரு பள்­ளி­வா­ச­லுக்கு வந்­தி­ருந்த போது அவர் மீது கூறப்­படும் புகார்­கள் குறித்த விசாரணை பற்றி அவ்விரு ஆஸ்­தி­ரே­லி­யர்­ களும் கேள்வி கேட்­ப­தற்­காக பிர­த­மரை நெருங்­கி­ய­போது அவ்­வி­ருவ­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர். போலி­சா­ரின் உத்­த­ரவை அவ்­வி­ரு­வ­ரும் பின்­பற்­றத் தவறிய தால் அவர்­கள் கைது செய்யப் பட்­ட­தாக மலே­சி­ய போலிசார் கூறினர்.

சரவாக், கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தில் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் லுயி எரோக்லு (வலது), செய்தியாளர் லிண்டன் பெஸ்ஸர். படம்: ஈபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!