கோலாலம்பூர்: 820,000க்கும் அதிகமான மலேசியர்களுக்கு நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் அகமது சாகித் ஹமிடி தெரிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு முதல் மலேசியக் குடிநுழைவுத் துறை இதுவரை மொத்த 827,921 மலேசியர்களை அந்தப் பட்டியலில் சேர்த்துள்ளது. அந்தப் பட்டியலில் 200,727 பேர் நொடித்துப்போனவர்கள், 118,892 பேர் கல்விக் கடன் பெற்று அடைக்காதவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 520 பேர் பாதுகாப்புசார்ந்த குற்றங்கள் புரிந்தவர்கள் என்றும் பிற 507,782 பேர் பிறவகைக் குற்றங்கள் புரிந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
"சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து முறையான அனுமதி பெறாவிட்டால் இந்தப் பட்டியலில் உள்ளவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியேற முடியாது," என்றார் அமைச்சர். 2010ஆம் ஆண்டு முதல் 54,000 மலேசியர்கள் தங்கள் மலேசியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்றார் அமைச்சர். சென்றாண்டு தங்கள் மலேசியக் குடியுரிமையைத் துறந்தவர் களின் எண்ணிக்கை 8,076. இந்தாண்டு மட்டும் ஒரு மாதத்துக்கு சராசரியாக 367 பேர், அதாவது மொத்தம் 1,102 பேர் தங்கள் மலேசியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என்று மலேசியக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
மலேசியாவின் துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமான அகமது சாகித் ஹமிடி