கோவை: ஆபாசப் பாடல் விவகாரம் தொடர்பில் இசையமைப்பாளர் அனி ருத் கோவை காவல் துறையினர் முன்பு முன் னிலையானார். பின்னர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளித்தார். ஆபாசப் பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்பு, அனிருத் இருவருக்கும் நேரில் முன்னிலையாக வேண்டுமென கோவை போலிசார் அழைப்பாணை அனுப்பினர். எனினும் நேரில் முன்னிலையாக அவகாசம் தேவை என சிம்பு சார்பில் மனு அளிக்கப்பட்டது. கனடாவில் இருந்ததால் அனிருத் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில் திங்கட்கிழமை கோவை வந்த அனிருத், தனது வழக்கறிஞருடன் கோவை காவல் நிலையத்தில் நள்ளிரவு 12 மணியளவில் முன்னி லையாகி எழுத்துப்பூர்வ விளக்கம் அளித்தார்.