கோவை: ஆணவக் கொலைகள் குறித்து திமுகவும் அதிமுகவும் கருத்தும் கண்டனமும் தெரிவிக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 81 ஆணவக் கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். "இக்கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் இயற்றுவது குறித்து மக்கள் நலக் கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில் தெரிவித்துள்ளோம். இதுகுறித்து திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் இதுவரை கருத்து சொன்னதாகத் தெரியவில்லை. கிரானைட் முறைகேடுகள், ஆணவக் கொலைகள் விவகாரங்களில் அதிமுக, திமுக இடையே 'நீயும் பேசாதே; நானும் பேசவில்லை' என்ற எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளதோ எனச் சந்தேகம் உள்ளது," என்றார் ராமகிருஷ்ணன்.
அதிமுக- திமுக இடையே ரகசிய ஒப்பந்தம்: ராமகிருஷ்ணன் சந்தேகம்
17 Mar 2016 07:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Mar 2016 06:38

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

ஸ்கூட் விமானம் மூலம் கோவைக்கு விலங்குகள் கடத்தியதாகச் சந்தேகம்

உத்தராகண்ட் சுரங்கத்திலிருந்து 41 ஊழியர்களும் பத்திரமாக மீட்பு

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!