சென்னை: கோஷ்டி மோதலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக மகளிர் காங்கிரசாருக்கு அக்கட்சியின் பொதுச்செயலரும் நடிகையுமான நக்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் மகளிர் காங்கிரஸ் சார்பில் விவசாய தொண்டர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அவர், மோதல் போக்கை கடைபிடிக்காமல் கட்சி யினர் இணக்கமாகச் செயல்பட வேண்டுமென அறிவுறுத்தினார்.
"காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் இருப்பது சகஜம். அதை நமக்குள் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும். தனித்துச் செயல்படு வது கண்டனத்திற்குரியது. இனி கோஷ்டிப் பூசலுடன் செயல்பட்டால், அவர்கள் மீது கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார் நக்மா. சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட பெண்களுக்கு 50 விழுக்காடு இடங்களை ஒதுக்க வேண்டும் என கட்சித் தலைமை யிடம் வலியுறுத்தப்படும் என்று குறிப்பிட்ட அவர், மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் முறையாக செயல்படுத்த வில்லை என குற்றம்சாட்டினார்.