சிம்புதேவன் இயக்கிய சரித்திரப் பின்னணி கொண்ட நகைச்சுவைப் படமான 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. இப்படத்தை இயக்குநர் சங்கர் தனது எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கோடம்பாக்க வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது.
இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவே நாயகனாக நடிக்க இருப்பதாகவும், சிம்புதேவன் இதை இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இம்முறை, சங்கருடன் இணைந்து லைக்கா நிறுவனமும் இப்படத்தை தயாரிக்கும் என்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துவருவதாகவும் விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனம் தற்போது ரஜினி நடிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் '2.0' படத்தை தயாரித்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', விஜய் ஆண்டனி நடிக்கும் 'எமன்', கமல் நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படம், சசிகுமார் நடிக்கும் புதிய படம் என கோலிவுட்டில் தனி முத்திரை பதித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.