சென்னை: எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலரும் முதல்வருமான ஜெயலலிதா தெரிவித்துள்ளார். 16 மாதங்களுக்குப் பின்னர் நேற்று அதிமுக தலைமை அலுவல கத்திற்கு வருகை தந்த அவர், பின்னர் அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் அனுபவித்த ஜெயலலிதா, கர்நா டகா உயர் நீதிமன்றத் தீர்ப்பை யடுத்து விடுதலையானார்.
மீண்டும் முதல்வராகப் பதவி யேற்ற பின்னர் சிலமுறை அவர் தொண்டர்களை நேரடியாக சந்தித் திருந்தாலும், கட்சி அலுவலகத் திற்கு வந்து யாரையும் சந்திக்க வில்லை. இந்நிலையில் 16 மாதங்களுக்குப் பின்னர் அவர் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தால் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகுந்த உற்சாக மடைந்தனர்.