ப.பாலசுப்பிரமணியம்
மறைந்துவிட்டாலும் மக்கள் மனதில் இன்னும் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்பது நேற்று நடந்த அமரர் திரு லீ குவான் இயூவின் முதல் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் புலப்பட்டது. மக்கள் செயல் கட்சி தலைமையகத்தில் நேற்று மாலை நடந்த இந்நிகழ்ச்சியில் மக்கள் கழக அடித்தளத் தலைவர்கள், கட்சி ஆர்வலர்கள் என கிட்டத்தட்ட 250 பேர் கலந்துகொண்டனர். போக்குவரத்து அமைச்சரும் மக்கள் செயல் கட்சியின் மத்திய நிர்வாகக் குழுத் தலைவருமான திரு கோ பூன் வான் இந்நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
"எதிர்காலத்தை நம்மால் கணிக்க இயலாது. ஆனால், எது நடந்தாலும் சமாளிக்க நம் மக்களை நம்மால் தயார்ப்படுத்த முடியும். மெத்தனமாக இருக்காமல் கனவு காண்பதுதான் முக்கியம்," என்றார் அவர். ஏழு தவணை களுக்கு நாடாளுமன்ற உறுப்பின ராக சேவையாற்றிய இங் கா திங், 76, இளம் மசெக ஆர்வலர் நிக்கோல் லியோங், 32, ஆகியோர் அமரர் லீ குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துணைப் பிரதமர்கள் தர்மன் சண்முகரத்னம், டியோ சீ ஹியன், ஓய்வு பெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங் ஆகியோரும் பங்கேற்றனர்.
மக்கள் செயல் கட்சி தலைமையகத்தில் நேற்று இரவு நடந்த இந்நிகழ்ச்சியில் கட்சியின் தலைவர் கோ பூன் வான் நினைவுப் பொருளைத் திறந்து வைத்தார்.