வாஷிங்டன்: வடகொரியாவில் 15 ஆண்டு கடுங்காவல் விதிக் கப்பட்டுள்ள அமெரிக்க மாணவர் ஒட்டோ வாம்பியரை உடனடியாக விடுவிக்குமாறு வடகொரியாவை அமெரிக்கா கேட்டுக்கொண் டுள்ளது. அந்த மாணவருக்கு சிறப்பு பொது மன்னிப்பு வழங்கி அவரை உடனடியாக விடுவிக்குமாறு வடகொரிய அரசாங்கத்தை அமெரிக்கா வலுவாக ஊக்கு விக்கிறது என்று வெள்ளை மாளிகைப் பேச்சாளர் ஜோஸ் எர்னெஸ்ட் கூறினார்.
அரசியல் ஆதாயத்திற்காக அமெரிக்கர் களை வடகொரியா பகடைக் காயாக பயன்படுத்தி வருவதாக வும் அவர் குற்றம் சாட்டினார். அரசியல் ரீதியில் நெருக்குதல் கொடுப்பதற்காக வடகொரியா சில சமயங்களில் வெளிநாட்டி னரைக் கைது செய்வதாகவும் அவர் சொன்னார். அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 21 வயதான ஒட்டோ வாம்பியர் கடந்த ஜனவரி மாதம் வடகொரியாவுக்கு சுற்றுலா வந்திருந்தபோது அங்கு கைது செய்யப்பட்டார். வெர்ஜினியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வாம்பியர் ஜனவரி 2ஆம் தேதி வடகொரியா வைவிட்டு புறப்பட விருந்தபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
வடகொரியாவுக்கு எதிரான குற்றச்செயலில் அவர் ஈடுபட்ட தாக வடகொரியா தெரிவித்தது. அங்கு அவர் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து அரசியல் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகை ஒன்றை திருட முயற்சி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது தேச துரேக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக வடகொரியா அறிவித்தது. இந்த வழக்கை விசாரித்த வடகொரிய உச்ச நீதிமன்றம் ஒட்டோவுக்கு 15 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.