புதுடெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை வரும் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள் ளது. இந்நிலையில் இந்த வழக்கை திசைதிருப்பும் விதமாகவே முதல் வர் ஜெயலலிதா தமது வருமான வரி கணக்குகளை அவசர அவசர மாக தாக்கல் செய்ததாக கர்நாடக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது. அம்மாநில அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகையில், ஜெயலலிதா தாம் குற்றமற்றவர் என்பதை சட்டப்படி நிரூபிக்க வேண்டும் என்றார். "ஜெயலலிதாவிடம் சொத்துக் களுக்கான உரிய ஆவணங்கள் இருந்திருந்தால் வருமான வரித் துறையினர் முதற்கட்டமாக நோட் டீஸ் அனுப்பியபோதே பதிலளித்தி ருப்பார். ஆனால் அப்படியான ஆவணங்கள் அவரிடம் அப்போது இல்லை.
"சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிக்கவே போலியான ஆவணங்களை ஜெயலலிதா உரு வாக்கியிருக்கிறார். ஜெயலலிதா 1991-=94ஆம் ஆண்டுக்கான தம்முடைய வருமான வரி கணக் குகளை 1998ல் தான் தாக்கல் செய்துள்ளார். அதேபோல் 1994-= 96ஆம் ஆண்டுக்குரியதை 1999ல் தான் தாக்கல் செய்திருக்கிறார்," என்று ஆச்சார்யா மேலும் சுட்டிக் காட்டினார்.