நகரி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டையைச் சேர்ந்தவர் முனிராமையா திருமலையில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக உள்ளார். அவரது மனைவி ஸ்ரீவானி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். மனைவி மீது பாசம் கொண்ட முனி ராமையா அவரது நினைவாகக் கோயில் கட்ட முடிவு செய்து சொந்த ஊரான ராஜம்பேட்டையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான 14 செண்ட் நிலத்தில் ரூ.36 லட்சம் செலவில் முற்றிலும் பளிங்குக் கற்களால் மிக நேர்த்தியான அழகிய கோயில் கட்டினார். கோயிலுக்குள் மனைவியின் உருவச்சிலை வைக்கப்பட்டு தின மும் பூசை செய்வதற்காக பூசாரியையும் பணியமர்த்தியுள்ளார்.
மேலும், மனைவி பெயரில் அறக்கட்டளைத் தொடங்கி சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். அதுபற்றி முனிராமையா கூறுகையில், ''எனது மனைவியின் முயற்சியால்தான் இன்று நான் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்யாகி இருக்கிறேன்'' என்று நெகிழ்ந்து கூறினார்.