பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகமும் இணைந்து அமரர் லீ குவான் இயூவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிக்கு ஏற்பாடு செய்துள்ளன. அடுத்த ஞாயிறு 27.3.2016 மாலை மணி 6.30க்கு "சொல்லரங்கம்" எனும் தலைப்பில் அந்த நினைவஞ்சலி பெக் கியோ சமூக மன்றத்தில் நடைபெறும்.
"திரு. லீ குவான் இயூ மாபெரும் தலைவராகக் கருதப்படுவதற்குப் பெரிதும் காரணமான பண்பு எது?" எனும் தலைப்பில் சொல்லரங்கம் இடம்பெறும். அதற்குக் காரணம் அவரது "தொலைநோக்கு" என்று விஜி ஜெகதீஷ், "நேர்மை" என்று மு.சேவகன், "திறமையை மதித்தல்" என்று சுப. அருணாசலம், "சமத்துவம்" என்று பிச்சினிக்காடு இளங்கோ ஆகியோர் பேசுவர். "அரசதந்திரம்"தான் காரணம் என்று முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன், "துணிவு" என்று முனைவர் செல்லக்கிருஷ்ணன், "உழைப்பு" என்று முனைவர் ஜி. ராஜகோபாலன், "ஊழலின்மை" என்று முனைவர் இரத்தின வேங்கடேசன் ஆகியோர் பேசுவர்.
எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தஞ்சோங் பகார் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அடித்தள ஆலோசகருமான திரு. மெல்வின் யோங் சிறப்பு வருகை புரிவார். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மறைந்த மாபெரும் தலைவருக்கு அஞ்சலி செலுத்த பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவும் எழுத்தாளர் கழகமும் அனைவரையும் அழைக்கின்றன.