புதுடெல்லி: 10 அணிகள் பங்கேற்றுள்ள 5வது பெண்கள் 20 ஓவர் உலகப் கிண்ண கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா = பாகிஸ்தான் விளையாடின. பாகிஸ்தான் 16 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழை பெய்ய தொடங்கியதும் போட்டி நிறுத்தப்பட்டது. டக்வொர்த்=லுவிஸ் முறைப்படி பாகிஸ்தான் அணி இரண்டு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். ஆட்டநாயகியாக பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் அனாம் அமின் தேர்வு செய்யப்பட்டார்.
இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியதால் இந்தியா முழுவதும் ரசிகர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். படம்: ராய்ட்டர்ஸ்