சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக வெளிவந்த தகவல் உண்மையல்ல என்று நடிகையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாஜகவுக்கு இப்போது எந்தவித செல்வாக்கும் இல்லை என்றார். "இந்தியா முழுவதும் பாஜக கூட்டணி என்றாலே ஓடி ஒளிகிறார்கள். மத்திய அமைச்சர்கள் வந்து பேசியும் தமிழகத்தில் பாஜகவால் கூட்டணி அமைக்க முடியவில்லை.
இது, தமிழகத்தில் பாஜகவுக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பதையே காட்டுகிறது. "தேர்தலில் போட்டியிடுவது குறித்து இதுவரை எந்த முடி வும் எடுக்கவில்லை. எந்தத் தொகுதிக்கும் நான் விருப்ப மனுவும் அளிக்கவில்லை. எனவே, சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் நான் போட்டியிட இருப்பதாக வந் துள்ள செய்தி தவறானது. காங்கிரஸ் வெற்றி பெற வேண் டும் என்பதே முதல் இலக்கு," என்றார் குஷ்பு.