பார்சிலோனா: ஸ்பெயினில் வெளிநாட்டு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் கொல்லப்பட்டனர். 43 பேர் காயம் அடைந்தனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று நிகழ்ந்த விபத்தில் ஐரோப்பிய பரிமாற்றத் திட் டத்தின் கீழ் பார்சிலோனா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் விபத்தில் சிக்கியதாக கேடாலோனியா வட்டார உள்துறை விவகாரங் களுக்கான தலைவர் ஜோர்டி ஜேன் சொன்னார். பார்சிலோனாவுக்கு தெற்கே 150 கி. மீட்டர் தொலைவில் ஃபிரெகினல்ஸ் என்ற சிறு நகரில் விபத்து நிகழ்ந்தது.
கவிழ்ந்து கிடக்கும் பேருந்து. படம்: இபிஏ