$1.99 பில்லியனுக்கு ஒரே கூரையின் கீழ் நான்கு பணிமனைகள் கட்டும் கொரியநிறுவனம்

ஒரே கூரையின் கீழ் நான்கு பணிமனைகளைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் கொரியாவின் ஜிஎஸ் இஞ்சினியரிங் அண்ட் கன்ஸ் டிரக்ஷன் கார்ப்பரேஷன் நிறுவ னத்துக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஏறத்தாழ 1.99 பில்லியன் வெள்ளிக்கு இந்தப் பணிகள் செய்து முடிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. புதிதாகக் கட்டப்படும் ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைப்புப் பணி மனையில் மூன்று ரயில் பணிமனைகளும் ஒரு பேருந்து பணிமனையும் அடங்கும். 36 ஹேக்ட்டர் நிலப்பரப்பில் இந்தப் பணிமனை கட்டப்படும். பணி மனையில் 220 ரயில்களும் 550 பேருந்துகளும் ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கப்படலாம்.

இம்மாதிரியான பணிமனை கட்டப்படுவது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று தெவிக்கப்பட்டது. இதற்கு முன்பு டௌன்டவுன் 2 ரயில் தடத்தின் 'காலி பத்து' பணிமனையின் கட்டுமானத்திலும் ஜிஎஸ் இஞ்சினியரிங் நிறுவனம் ஈடுபட்டிருந்தது.

'காலி பத்து' பணிமனையை (படம்) கட்டிய ஜிஎஸ் இஞ்சினியரிங் நிறுவனத்துக்கு ஒரே கூரையின் கீழ் நான்கு பணிமனைகளைக் கட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!