சோல்: வடகொரியா நேற்று ஐந்து குறுந்தொலைவு ஏவுகணைகளை கடலில் செலுத்தி சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது. அணுவாயுதத்தை ஏந்திச் செல்லும் ஆற்றல் மிக்க இரு ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு சில நாட்களில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை மேற்கொண்டுள்ளது. வடகொரியா ஜனவரி 6ஆம் தேதி நான்காவது அணுவாயுத சோதனையை மேற்கொண்டது முதல், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. வடகொரியா மேற்கொண்ட அணுவாயுதச் சோதனை மற்றும் ஏவுகணைச் சோதனைகளைக் கண்டித்து ஐநா பாதுகாப்பு மன்றம் இம்மாதத் தொடக்கத்தில் அந்நாட்டின் மீது கடுமையான தடைகளை விதித்தது.
வடகொரியா ஏவிய குறுந்தொலைவு ஏவுகணைகளை தென்கொரிய மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கின்றனர். படம்: ஈபிஏ