நித்திஷ் செந்தூர்
சிங்கப்பூரின் முதல் பிரதமரான அமரர் லீ குவான் இயூ, பசுமையான, தூய்மையான சிங்கப்பூரை உருவாக்க மேற் கொண்ட நடவடிக்கைகளின் தாக்கம் இளையர்களின் மன திலும் வேரூன்றியுள்ளது. அதனை வெளிப்படுத்தும் வண்ணம் 300க்கும் மேற்பட்ட இளையர்கள் இம்மாதம் 5ஆம் தேதி புலாவ் உபின், கோனி தீவுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேசிய இளையர் மன்றமும் 'அவுட்வேர்ட் பவுண்ட் சிங்கப்பூர்' அமைப்பும் இணைந்து இந்த நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
கரையோரப் பகுதிகளையும் சதுப்பு நிலங்களையும் சுத்தம் செய்தல், வனங்களை மறுஉருவாக்கம் செய்தல், கரையோரத்தில் தடுப்புகளை எழுப்புதல், தீவுப் பகுதியில் களையெடுத்தல், பறவைகளுக்கான தங்கும் பெட்டிகளைக் கட்டுதல், செயலிகளின் வாயிலாக உயிரினங்களைப் பற்றிய கருத்து சேகரித்தல் போன்ற 6 வெவ்வேறு சுற்றுச் சூழல் நடவடிக்கைகளில் 15 முதல் 35 வயதிற்கு உட்பட்ட இளையர்கள் ஈடுபட்டனர். புலாவ் உபின் தீவின் மேற்கு பகுதியான தாஜாமில் 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு மரங்கள் பல இரையாகின. மரங்களை அவ்விடத்தில் மறு உருவாக்கம் செய்யும் பணியில் சுமார் 75 இளையர்கள் 40 மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
"நாங்கள் குழுவாகச் செயல்பட்டதால் மரக்கன்றுகளை நடும் பணி மிகவும் சுலபமாக முடிந்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் 30 மரக்கன்றுகளை நட்டோம்," என ராஃபிள்ஸ் தொடக்கக் கல்லூரியில் பயிலும் முகமது சுஃப்யான், 18, தெரிவித்தார். "சுற்றுச்சூழலைப் பேணிக் காப்பது சமூகப் பொறுப்பு. தொடக்கக் கல்லூரியில் சுற்றுச் சூழலைப் பற்றிய ஒப்படைப்பு ஒன்றைச் செய்தேன். இதர நாடுகளில் சுற்றுச்சூழல் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்துகொண்டேன். சிங்கப் பூரில் இருப்பது போன்ற தூய்மையான கடற்கரைகளையோ சுத்தமான பாதைகளையோ வெளிநாடுகளில் காண்பது அரிது. நமது இயற்கை வளங்களைக் கட்டிக்காக்க சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் வகையில் தொண்டாற்ற வேண் டும் என்ற எண்ணம் என்னுள் தோன்றியது," என சுஃப்யான் மேலும் கூறினார்.
புலாவ் உபின் தீவில் உள்ள தாவரங்கள், விலங்குகள் பற்றி இளையர்கள் அறிந்துகொண்டனர். (சிவப்பு நிறப் பையுடன்) குனிந்து செடிகளை உற்று நோக்கும் ரிஷி வர்மா. படங்கள்: அவுட்வேர்ட் பவுண்ட் சிங்கப்பூர்