பணிப்பெண் பட்டினி; தம்பதியர் குற்றவாளிகள்

பிலிப்பீன்ஸ் பணிப்பெண்ணின் உடல் எடை 49 கிலோவி லிருந்து 29 கிலோ வரை குறையும் அளவுக்குப் பட்டினிப்போட்ட தம்பதியர் இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது. மூன்று நாட்களாக நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு பணிப் பெண்ணுக்கு போதுமான உணவு அளிக்கத் தவறியதையும் 15 மாதங்களில் அந்தப் பணிப்பெண்ணின் உடல் எடை 20 கிலோ குறை வதற்குக் காரணமாக இருந்த தையும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். 2014 ஏப்ரலில் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பணிப்பெண் திருமதி தெல் மா ஓயாசன் காவிடனின், 40, எடை 29 கிலோ. 2013 ஜனவரியில் அவரது எடை 49 கிலோவாக இருந்தது. அவரது முன்னைய முதலாளியான பங்கு வர்த்தகர் லிம் சூன் ஹோங், 47, வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் (வொர்க் பாஸ்) விதிமுறை களை மீறிய குற்றச்சாட்டு களை ஒப்புக்கொண்டார்.

இந்த விதிமுறையின்கீழ் பணிப்பெண்ணுக்கு சம்பளம், மருத்துவ சிகிச்சை, போது மான உணவு போன்றவற்றை வழங்குவது அவசியமாகும். லிம்மின் மனைவி சோங் சுய் ஃபூன், 47, கணவரின் குற்றச் செயல்களில் உடந்தையாக இருந்ததை ஒப்புக்கொண்டார். இதற்கு அதிகபட்சமாக 12 மாதம் சிறைத் தண்டனையும் $10,000 அபராதமும் விதிக்கப்படலாம். நீதிபதி லோ வீ பிங், வழக்கை ஏப்ரல் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இருவரும் தலா $3,000 பிணைத்தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!