சொந்த வருமான வரி விலக்கிற்காக ஒருவர் கோரும் மொத்தத் தொகையின் உச்சவரம்பு $80,000 ஆக்கப்படும். எனினும், வரி செலுத்தும் தனிநபர்களில் 99 விழுக்காட்டி னரை இது பாதிக்காது என்றார் அவர். உதாரணத்திற்கு பத்தில் ஒன்பது மாதர்கள் தற்போதுள்ள வேலை செய்யும் தாய்மார்களுக்கான பிள்ளைச் சலுகையை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம். பிள்ளைப் பெற்ற பிறகும் தொடர்ந்து வேலை செய்யும் மாதர்களுக்கு இந்தச் சலுகை உதவியாக உள்ளது. "தனிப்பட்ட வருமான வரித் திட்டத்தை இந்த உச்சவரம்பு மேலும் முற்போக்கானதாக ஆக்கும்," என்று குறிப்பிட்ட நிதி அமைச்சர், தனிப்பட்ட வருமான வரிச் சுமை இன்னும் குறைவாகவே உள்ளது என்றார்.
சிங்கப்பூரை தொடர்ந்து போட்டித்தன்மை மிக்கதாக திகழச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்த வரிக் கட்டமைப்பு உள்ளது என்றார் அவர். கணக்கீட்டு ஆண்டு 2018 முதல் நடப்புக்கு வரும் இந்த உச்சவரம்பின் மூலம் கூடுதலாக ஆண்டுக்கு $100 மில்லி யன் வருமான்ம் உயரும் என மதிப்பிடப்படுகிறது.