மாறி வரும் வேலைத் தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள தங்களுக்குள் உள்ள திறன் களை மேம்படுத்த உதவும் திட்டங் களை நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று அறிவித்தார். புதிய வேலையைத் தேடுவதில் சிரமத்தை எதிர்நோக்கும் ஊழியர் களுக்கு உதவும் வகையில் நிபுணத் துவ மாறுதல் திட்டம் எனும் சம்பள ஆதரவு திட்டத்தை அரசு இன்னும் அதிகமான துறைகளுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. அத்துடன் 'டெக்ஸ்கில்ஸ் அக்சி லரேட்டர்' எனும் தொழில்நுட்பத் துறைத் திறன்பயிற்சி, வேலை அமர் வுத் திட்டம் அறிமாகமாகிறது.
இதில் தகவல் தொடர்புத் துறை யில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும். இந்தப் பயிற்சியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தொழில்துறை அங் கீகார தரங்கள் கற்றுக் கொடுப்ப துடன் அவர்களுக்குச் சான்றிதழ் களும் வழங்கப்படும். அதன் மூலம் அவர்கள் சான்றிதழ் பெற்ற ஆற்றல் திறன்களைப் பெற்றவர்களாகின் றனர். 'ஸ்கில்ஸ்ஃப்யூச்சர்' எனும் எதிர் காலத் திறன் வளர்ச்சித் திட்டமும் தொடர்ந்து விரிவாக்கப்பட்டு, ஆழ மாக்கப்படும் என்றும் அமைச்சர் ஹெங் தெரிவித்தார். இந்தத் திட்டங்கள் சிங்கப்பூரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி அதன் மூலம் வாழ்க்கையில் முன் னுக்கு வர நல்ல வாய்ப்பளிக்கிறது என்றும் அமைச்சர் ஹெங் சொன்னார்.