கடற்துறை, பதனீட்டுத் துறை ஆகியவற்றில் தொழில் நிலவரங் கள் சரியில்லாமல் இருப்பதையும் அவற்றில் ஒர்க் பர்மிட் ஊழியர் கள் குறைவதையும் கருத்தில் கொண்டு அந்தத் துறைகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை அதிகரிப்பு ஓராண்டுக்கு இராது. தயாரிப்புத் துறையிலும் அடுத்த ஓராண்டுக்கு தீர்வையில் மாற் றம் இருக்காது என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று 2016 வரவு செலவுத் திட் டத்தில் அறிவித்தார். சென்ற 2015 வரவுசெலவுத் திட் டத்தில் அறிவிக்கப்பட்டதைப் போலவே சேவைத் துறையிலும் கட்டுமானத் துறையிலும் தீர்வை அதிகரிக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
கட்டுமானத் துறையில் 'அடிப்படை நிலை ஆர்2' (Basic Tier R2) ஊழியர் களுக்கான தீர்வை இப்போது $550 ஆக உள்ளது. இது வரும் ஜுலை முதல் $650 ஆகும். உற்பத்தித்திறனுக்கு ஆதரவு தரும் வகையில் நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த ஊழியர்க ளைத் தக்க வைத்துக்கொள்ள ஊக்கமூட்ட அடுத்த ஆண்டு ஜூலை முதல் குறைந்தபட்ச அனுபவத் தேவை இரண்டிலி ருந்து மூன்று ஆண்டுகளாக உயர்த்தப்படும்.
சேவைத் துறையில், 'ஆர்2' ஊழியர்களுக்கான தீர்வை, அடிப்படை நிலைக்கு $420ல் இருந்து $450க்கும் நிலை2 (Tier 2) ஊழியர்களுக்கு 550 லிருந்து 600 ஆகவும் நிலை 3 (Tier 3) ஊழியர்களுக்கு $700 முதல் $800 ஆகவும் உயரும். 'எஸ் பாஸ்' தாரர்களுக்கு (S Pass holder) உரிய தீர்வை யும் வரும் ஜூலை 1 முதல் உய ரும். 'அடிப்படை நிலை (Basic Tier)' ஊழியர்களுக்கான தீர்வை $315 முதல் $330 ஆக வும் நிலை 2 (Tier 2) சேவை ஊழியருக்கான தீர்வை $550ல் இருந்து $650 ஆகவும் அதிக ரிக்கும் என்று கூறப்பட்டது.