புதுடெல்லி: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இங்கிலாந்து தோற்கடித்துள்ளது. பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்தடிக்கத் தீர்மானித்தது. தொடக்க ஆட்டக்காரர் ஜெஸன் ராய் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ஜேம்ஸ் வின்ஸ் 22 ஓட்டங்கள் எடுத்து நபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மூன்றாவது வீரராக களமிறங்கிய இங்லாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் 12 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 'ரன் ஆவுட்' செய்யப்பட்டார். இதன் பிறகு களமிறங்கிய மோர்கன் (0), ஸ்டோக்ஸ் (6), பட்லர் (7) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் நடையைக் கட்ட இங்கிலாந்து அணி 85 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டு களை இழந்து தடுமாறியது. ஆனால் 'ஆல்ரவுண்டர்' மொயின் அலியும் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் வில்லேவும் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். மொயின் அலி 41 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் களை இழந்து 142 ஓட்டங்கள் எடுத்தது. இந்தியாவின் முதுகெலும்பான விராத் கோஹ்லியும் வேகமாக ஓட்டங்களைக் குவிக்க முடியாமல் திணறினார். 24 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் கோஹ்லி சிக்சர் அடிக்க முயற்சி செய்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் பாண்டியா களமிறங்கினார். பாண்டியா 7 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி ஆகியவற்றுடன் 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
படம்: ஏஎப்பி