சோல்: ராக்கெட் இயந்திரத்தை வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாக வடகொரியா அறிவித்துள்ளது. அணுவாயுதத்தை ஏந்திச்செல்லும் ஆற்றல் மிக்க ஏவுகணைகளைச் சோதனை செய்துவரும் வடகொரியா தொடர்ந்து இத்தகைய மேலும் பல ஏவுகணைகளை அந்நாடு மேம்படுத்தக்கூடும் என்பதை தற்போதைய சோதனை உணர்த்துவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் ராக்கெட் இயந்திர சோதனையைத் தொடர்ந்து அந்நாட்டுக்கு சரியான பதிலடி கொடுக்க தயாராக இருக்குமாறு தென்கொரிய அதிபர், அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.