ஐஸ்வர்யா தனு‌ஷின் புதிய அவதாரம்

ரஜினியின் மகளும் தனு‌ஷின் மனைவியுமான ஐஸ்வர்யா '3' படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து 'வை ராஜா வை' என்னும் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இவர் அடுத்ததாக எழுத்தாளராக அவதாரம் எடுத்துள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் 'ஒரு ஆப்பிள் பெட்டி மீது நின்றுகொண்டு' (Standing on an Apple Box) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்தப் புத்தகம் மூலம் எழுத்தாளராக அறிமுகமாக இருக்கும் இவர், தனது வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்கள், தனது தந்தை ரஜினி பற்றி விரிவாக எழுதி இருக்கிறாராம்.

"இந்தப் புத்தகத்தில் சினிமா களத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சிகரமான கதைகளையும் நினைவுகளையும் பதிவு செய்துள்ளேன். எனது சொந்த அனுபவங்களாக இருந்தாலும் இதிலிருந்து பெண்களுக்குத் தேவையான பல முன்னுதாரணங்களைப் பிரதிபலித்திருப்பதாகவே கருதுகிறேன். அத்துடன் ஒவ்வொரு பெண் ணும் வாழ்க்கையின் சுக துக்கங்களையும் எப்படிச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்பதையும் விவரித்துள்ளேன்," என்கிறார் ஐஸ்வர்யா. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி வெளியிட இருக்கின்றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!