இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) ஒரு பிரம்மாண்ட அறிவிப்பாக இல்லை. புதிய அரசாங்கம் பதவியேற்று இன்னும் ஓராண்டு ஆகாத நிலையில் இதுபோன்ற பட்ஜெட் அறிவிப்பு எதிர்பார்த்தது தான். இருப்பினும் நிதி அமைச்சர், பொருளியலைப் பலப்படுத்த நீண்ட கால திட்டங்களை அறிவித்துள்ளார் என்று தொழில்முனைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு இந்தர்ஜித் சிங் (படம்) கருத்து தெரிவித்துள்ளார். "பொருளியல் ரீதியில், இந்த பட்ஜெட் எதிர்காலப் பொருளியல் குழுவின் திட்டங்களுக்கு ஒரு முன்னோடி அறிவிப்பாக இருக்கிறது.
"பொருளியலின் நீண்ட மேம்பாட்டுத் திட்டங்கள், எதிர்கால பொருளியலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள விழையும் நிறுவ னங்களுக்கான பொருளியல் மாற்றங்கள், நிறுவனங்களுக்கான புத் தாக்கம் மற்றும் மாற்றங்கள், புதிய ஜூரோங் புத்தாக்க வட்டாரம் போன்ற திட்டங்கள் எதிர்காலப் பொருளியல் குழுவின் இலக்கு களாகும்," என்று குறிப்பிட்ட திரு சிங், "இவை நிறுவனங்களுக்கும் தொழில்துறைகளுக்கும் மிக நல்ல நீண்டகால திட்டங்கள்," என்றார். "ஆனால், நிறுவனங்கள் தற் போது எதிர்நோக்கும் செலவுப் போட்டித்தன்மை, தேவையின் சரிவு, நிதி இருப்பு குறைந்து வரு தல், மனிதவளப் பற்றாக்குறை போன்ற விவகாரங்களுக்கு இந்த பட்ஜெட்டில் தீர்வு எதுவும் கூறப்பட வில்லை.