ப. பாலசுப்பிரமணியம்
பாசிர் பாஞ்சாங், ஜூரோங் மின் நிலையங்களில் பல்லாண்டு கால மாக தொழில்நுட்ப உதவியாளாராகப் பணியாற்றிய அனு பவம் திரு கே. ஏ. நாகராஜனுக்கு (படம்) உண்டு. இவ்வாண்டு 86 வயது பூர்த்தியாகும் இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பாதுகாவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகனும் மகளும் திருமணம் புரிந்து தனிக் குடித்தனம் சென்றுவிட்டனர். இளைய மகனுடனும் இல்லத் தரசியான மனைவியுடனும் சிங்கப்பூரின் வடக்கு பகுதியில் நான்கறை வீட்டில் இவர் வசிக்கின்றார். வேலைக்குச் சென்று குடும்பப் பொறுப்புகளைக் கையாளும் திரு நாகராஜன், இவ்வாண்டிலிருந்து நடப்புக்கு வரும் 'சில்வர் சப்போர்ட்' எனும் மூத்தோர் ஆதரவுத் திட்டத்திலிருந்து பயன் பெறக்கூடும்.
வாழ்நாள் ஊதியம், வீட்டின் வகை, குடும்ப ஆதரவின் அளவு (வலது பட்டியலைப் பார்க்கவும்) ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இவருக்கு $450 வழங்கப்படும். இவரின் மனைவி யான 73 வயது இந்திராணிக்கும் இத்தொகை கிடைக்கும். ஓர் ஆண்டிற்கு மொத்தமாக இருவருக்கும் $3,600 உதவித் தொகை வழங்கப்படும். இது குறித்து தமிழ் முரசிடம் பேசிய அவர், மூத்தோர் ஆதரவுத் திட்டம் குறித்த தனது கருத்து களைப் பகிர்ந்துகொண்டார். "கைச்செலவுக்கு இந்தத் தொகை பேருதவியாக இருக்கும். ஏனெனில் சராசரியாக ஒரு மாதத்திற்கு இந்த உதவித் தொகை மூலம் எனக்கு $150 கிடைக்கிறது," எனத் தெரிவித்தார் திரு நாகராஜன்.